கடலுார்; கடலுார் கூத்தப்பாக்கம், வள்ளலார் நகரில் உள்ள ஆனந்த விநாயகர் கோவிலில் 33ம் ஆண்டு ஸம்வத்ஸ்ராபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு காலை கணபதி, துர்கா, ஆஞ்சநேய, நவக்கிரக ஹோமங்கள் நடந்தன. தொடர்ந்து ஆனந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மாலை சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.