திரிபுராந்தகர் கோவிலில் ஆடி பிரம்மோத்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூலை 2025 05:07
கூவம்; திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திரிபுராந்தக சுவாமி கோவிலில் இன்று ஆடி பிரம்மோத்சவம் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கடம்பத்துார் ஒன்றியம் கூவம் ஊராட்சியில் திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திரிபுராந்தக சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ திருவிழா, இன்று காலை 8:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை 7:00 மணிக்கு லட்சுமி, சரஸ்வதி, துர்கா சுவாமிகள் பவழக்கால் சப்பரத்திலும், இரவு 7:00 மணிக்கு திரிபுரசுந்தரி அம்பாள் பல்வேறு வாகனங்களிலும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். வரும் 25ம் தேதி தேரோட்டமும், வரும் 29ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறும் என, ஹிந்து சமய அறநிலைய துறையினர் தெரிவித்தனர்.