பதிவு செய்த நாள்
20
ஜூலை
2025
06:07
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவில் ஆடி கிருத்திகை விழா, இன்று கோலாகலமாக நடந்தது.
திருப்போரூரில் பிரசிதிபெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை, மாசி, சித்திரை, ஆடி மாதங்களில் வரும் கிருத்திகை நாள், முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. அதுபோல, இன்று ஆடி கிருத்திகை விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின், சிறப்பு அர்ச்சனைகளும், தீபாரதனைகளும் சுவாமிக்கு செய்யப்பட்டன. விழாவில், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பக்தர்கள், காவடி எடுத்தும், அலகு குத்தியும், முடி காணிக்கை செலுத்தியும் வேண்டுதல்களை நிறைவேற்றினர். தொடர்ந்து இரவு 7:00 மணியளவில் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கந்தபெருமானின் திருவீதியுலா மாடவீதிகளில் நடந்தது.