திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஆக 2025 07:08
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் நேற்று ஆடிக்கிருத்திகை விழா துவங்கியது. திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக் கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத் திருவிழா, நேற்று ஆடி அஸ்வினியுடன் துவங்கியது. அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பச்சை மாணிக்க கல், தங்கவேல், தங்ககிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இன்று ஆடிப்பரணியும், நாளை ஆடிக் கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பத்திருவிழாவும் நடக்கிறன்றன. வரும் 17ம் தேதி இரண்டாம் நாள் தெப்பமும், 18ம் தேதி மூன்றாம் நாள் தெப்பத்துடன், ஆடிக் கிருத்திகை விழா நிறைவு பெறுகிறது.