ஆடி கடைசி வெள்ளி; முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஆக 2025 10:08
கோவை, சாய்பாபா காலனி முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளி கிழமையை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
ஆடி மாதம் கடைசி வெள்ளி கிழமையை முன்னிட்டு கோவை சாய்பாபா காலனி தெரு எண் 8-ல் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் மூலவர் அம்மனுக்கு அபிஷேகம். பூஜை நடந்தது. இதில் வெள்ளிகாப்பு கவசத்துடன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.