திருப்பூர்: ஆடி கிருத்திகையான நேற்று, வாலிபாளையம் ஸ்ரீகல்யாண சுப்பிரமணியர் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.
ஆடி மாதத்தில், இரண்டு முறை கிருத்திகை நட்சத்திரம் வந்தது; இரண்டாவது முறையாக கிருத்திகை நட்சத்திரம் வந்திருந்ததால், நேற்று, ஆடிக்கிருத்திகை சிறப்பு வழிபாடு நடந்தது. ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஷண்முகசுப்பிரமணியருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு, மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம், திருவீதியுலா நிகழ்ச்சிகள் நடந்தன.
* வாலிபாளையம் ஸ்ரீகல்யாண சுப்பிரமணியர் கோவிலில், சுவாமிக்கு மகா அபிஷேகமும், சிறப்பு அலங்காரபூஜையும் நடந்தது. செவ்வரளி மாலைகளை அணிந்து, வள்ளி, தெய்வானை சமேதராக, கல்யாண சுப்பிரமணியர் அருள்பாலித்தார்.
* ஆடிக்கிருத்திகையான நேற்று, மூர்த்தி நாயனார் மற்றும் புகழ்சோழ நாயனார் குருபூஜை நடந்தது. சிவாச்சார்யார்கள் அபிஷேகம் மற்றும் அலங்காரபூஜைகள் செய்தனர். அர்த்தஜாம பூஜை அடியார்கள் திருக்கூட்டம், மாணிக்கவாசகர் மன்றத்தினர், திருவாசகம் மற்றும் தேவார பதிகங்களை பாராயணம் செய்து வழிபட்டனர்; தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.