அன்னூர் மன்னீஸ்வரருக்கு ஆவணி முதல் சோமவார சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஆக 2025 10:08
கோவை; அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் ஆவணி முதல் சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
கோவை மாவட்டம், அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் ஆவணி முதல் சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம். பூஜை நடந்தது. இதில் உற்சவசவ மூர்த்தியான சந்திரசேகர் -ஆனந்தவல்லி தாயார் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர் இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.