ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05செப் 2025 05:09
போடி; ஓணம் பண்டிகையை முன்னிட்டு, போடி ஐயப்பன் கோயிலில் மலர் அலங்காரத்தில் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு போடி ஐயப்பன் கோயிலில் ஐயப்ப பக்த சபை, அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் ஐயப்பனுக்கு மலர் அலங்காரத்தில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. குருநாதர் மகாலிங்கம் தலைமை வகித்தார். தலைவர் ஹரிஹரன், செயலாளர் சேதுராம், பொருளாளர் கருப்பையா, துணைத் தலைவர்கள் சுந்தரம், ராஜாமணி, துணைச் செயலாளர்கள் மணிகண்டன், சன்னாசி முன்னிலை வகித்தனர். சுவாமி அலங்காரத்தினை கமலக்கண்ணன் பட்டாச்சாரியார் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனின் தரிசனம் பெற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டன.