Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சந்திர கிரகணம் முடிந்து அயோத்தி ... மேட்டுப்பாளையம் மங்கள வலம்புரி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் மேட்டுப்பாளையம் மங்கள வலம்புரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1,400 ஆண்டு பழமையான சிவலிங்கம்; உத்திரமேரூர் சுடுகாட்டில் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
1,400 ஆண்டு பழமையான சிவலிங்கம்; உத்திரமேரூர் சுடுகாட்டில் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

08 செப்
2025
05:09

உத்திரமேரூர்; உத்திரமேரூர் கருங்குட்டை சுடுகாட்டில், 1,400 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் சிலை நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.


உத்திரமேரூர் பேரூராட்சி, காஞ்சிபுரம் செல்லும் சாலையோரத்தில் கருங்குட்டை சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டில் பல ஆண்டுகளாக இருந்துவரும் சிவலிங்கம் சிலை, அப்பகுதி மக்களிடையே கவனம் பெறாமல் இருந்தது. இந்நிலையில், இதை கண்ட ஒருவர், உத்திரமேரூர் சுடுகாட்டில் பழமையான சிவலிங்கம் சிலை இருப்பதாக, வீடியோ பதிவிட்டிருந்தார். இதையடுத்து, தகவலறிந்த சிவனடியார்கள் அங்கு வந்து சிலையை ஆராய்ந்தனர். இது 1,400 ஆண்டுகள் பழமையான சிலை என, தெரிவித்தனர். இந்த சிலை 8 அடி உயரம் உடையது. அதை சுற்றிலும் 10க்கும் மேற்பட்ட மண்டப துாண்கள் மண்ணில் பாதியளவு புதைந்துவாறு உள்ளன. அதை தொடர்ந்து, சிவனடியார்கள் சிவலிங்க சிலையை துாய்மைப்படுத்தி பூஜை செய்து வழிபட்டனர். இது குறித்து காஞ்சி சிவபாலன் சிவனடியார் கூறியதாவது: உத்திரமேரூர் கருங்குட்டை சுடுகாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கம் சிலை பல்லவர் காலத்து சிலை வடிவமைப்பு முறையில் உள்ளது. கருங்குட்டை சுடுகாட்டில் சிவன் கோவில் இருந்ததற்கு ஆதாரமாக, அதன் அருகிலேயே மண்டப தூண்கள் மண்ணில் புதைந்து உள்ளன.இந்த சிவலிங்க சிலையை சுடுகாட்டில் இருந்து மீட்டு, வேறொரு இடத்தில் வைத்து மக்கள் வழிபாடு செய்ய, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்க்கு முகூர்த்தக்கால் நடும் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; உலகப் புகழ்பெற்ற, தஞ்சை பெரிய கோவிலை, கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040வது , கோலாகலமாக ... மேலும்
 
temple news
புதுச்சேரி, கவுசிக பாலசுப்பிரமணியர் கோவில் சஷ்டி நிறைவு விழாவை யொட்டி வள்ளி, தெய்வானை சமேத கௌசிக ... மேலும்
 
temple news
சென்னை; பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவிலில், 2 கோடி ரூபாயில் திருப்பணிகள் முடிந்த நிலையில் இன்று மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar