தி.வைரவன்பட்டி திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15செப் 2025 06:09
திருப்புத்தூர்; திருக்கோஷ்டியூர் அருகே தி.வைரவன்பட்டி திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் எழுந்தருளியுள்ள மூலபால கால பைரவர் சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமி தினங்களில் பக்தர்களால் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. அஷ்டமி விழாவை முன்னிட்டு பைரவர் சன்னதியில் யாகசாலையில் மகா கணபதி பூஜை, தீபாராதனைகள், மகா பைரவயாகம் தொடங்கப்பட்டு பின்பு கோ பூஜை நடந்தது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நெய்,வஸ்திரம், புஷ்பங்களால் யாகதம் நடந்தது. பி்ன்னர் மகாபூர்ணாகுதியும், அலங்காரத் தீபாராதனை நடந்தது. யாகத்தில் உள்ள புனித நீர் கலசங்களுக்கும் பல வித தீபாராதனைகள் நடந்தன. பின்னர் கலசங்கள் புறப்பாடாகி மூலவருக்கு