விழுப்புரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகானச ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16செப் 2025 10:09
விழுப்புரம்; விழுப்புரம் அடுத்த அரசமங்கலம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த வைகானச ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. அதனையொட்டி நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு தொடங்கி மூலவர், உற்சவர் பெருமாளுக்கும் திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.