Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை கிருஷ்ணன் கோவிலில் ஜெயந்தி ... காரமடை சந்தான வேணுகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா காரமடை சந்தான வேணுகோபால சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிருஷ்ண ஜெயந்தி விழா: கருடாழ்வாரை மேள தாளத்துடன் அழைத்து வரும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
கிருஷ்ண ஜெயந்தி விழா: கருடாழ்வாரை மேள தாளத்துடன் அழைத்து வரும் நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

16 செப்
2025
11:09

கம்பம்; கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கம்பத்தில் கருடாழ்வாரை மேள தாளத்துடன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இன்று உறியடி திருவிழா நடக்கிறது.


கம்பம் யாதவர் மடாலய வளாகத்தில் உள்ள யதுகுலவல்லி சமேத வேணுகோபால கிருஷ்ணன் கோயிலில் ஆவணி ரோகினி நட்சத்திரத்தில் கிருஷ்ணர் பிறந்தநாளை, கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடி வருகின்றனர். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நூற்றுக்கணக்கில் பெண்கள் பால்குடம் எடுத்து வந்தனர். பாலாபிஷேகம் முடிந்த பின், பெண்கள் பொங்கல் பானைகளுடன் ஊர்வலமாக சென்று கம்ப ராயப் பெருமாள் கோயிலில் பொங்கல் வைத்து காசி விஸ்வநாதரையும், சிவபெருமானையும் வழி பட்டனர். தொடர்ந்து உற்ஸவர் கம்பராய பெருமாளையும், அவரது வாகனமான கருடாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள் செய்து ஊர்வலமாக வேணுகோபால கிருஷ்ணன் கோயிலிற்கு சென்றனர். ஜெயந்தி விழாவை முன்னிட்டு குழந்தைகள் கிருஷ்ணர், ராதை, நரசிம்மர் உள்ளிட்ட கிருஷ்ண அவதார வேடங்களை அணிந்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


இன்று (செப்.,16) கம்பராயப்பெருமாள் திருமஞ்சனம், கம்பராயப் பெருமாள் திருவாரதனம், மங்கள ஆரத்தி, இரவு 8:00 மணியளவில் கம்பராயப் பெருமாள் கருடவாகனம் ஊர்வலமாக புறப்பட்டு வேலப்பர் கோயில் முன்பு வழுக்கு மரம் ஏறுதல், உறியடி நிறைவு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. இதன் பின் சுவாமி கம்பராயப் பெருமாள் கோயில் சென்றடையும். விழாவிற்கான ஏற்பாடுகளை கம்பம் யாதவ மகாசபை நிர்வாகிகள் செய்துள்ள னர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar