Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சி பெருமாள் கோவில்களில் ... திருப்பதியில் டிசம்பர் மாத தரிசனம்,  ஒதுக்கீடு விவரங்கள் வெளியீடு திருப்பதியில் டிசம்பர் மாத தரிசனம், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஸ்வ பிரம்ம ஜெயந்தி விழா; ஏராளமானோர் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
விஸ்வ பிரம்ம ஜெயந்தி விழா; ஏராளமானோர் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

18 செப்
2025
11:09

கீழக்கரை; கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி செல்லும் வழியில் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளால் வேல் கொண்டு ஸ்தாபிதம் செய்யப்பட்ட செந்தில் முருகன் கோயில் உள்ளது. இதன் அருகே உள்ள அலங்கார மண்டபத்தில் தேவலோக சிற்பியாக திகழும் விஸ்வகர்மாவிற்கு தனி சன்னதி உள்ளது. நேற்று காலை 9:30 மணிக்கு மூலவர் செந்தில் முருகனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பூஜைகளை உத்தரகோசமங்கை நாகராஜன் பட்டர் செய்தார்.


தனி சன்னதி கோயிலாக உள்ள விஸ்வகர்மாவிற்கு 16 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜிக்கப்பட்டன. சிவாச்சாரியார்களால் கணபதி ஹோமம் விக்னேஸ்வர பூஜை உள்ளிட்டவைகள் நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் விஸ்வகர்மாவினை வணங்கி சென்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை செந்தில் முருகன் கோயில் நிர்வாகத் தலைவர் விஜயகுமார், கீழக்கரை மனுமயா இளைஞர் கொல்தச்சு தொழிலாளர்கள் சங்கத் தலைவர் தேவேந்திரன், தலைமை பொறுப்பாளர் சி.கே.வேலன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விஸ்வ பிரம்ம ஜெயந்தி விழாவை முன்னிட்டு தேவ தட்சனாகிய விஸ்வகர்மா தேவலோகத்தின் கட்டடக் கலைஞர் மற்றும் கருவிகளை உருவாக்குவது குறித்தும், மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கு புதிய நகரத்தை நிர்மாணித்ததில் விஸ்வகர்மாவின் பங்கு பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது. விஸ்வகர்மா சமூகத்தினர் ஐந்து முக்கிய தொழில்களில் ஈடுபடுகின்றனர். இரும்பு, மரவேலை, சிற்ப வேலை, பாத்திர வேலை மற்றும் தங்க நகை உள்ளிட்ட பணிகளாகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
புது டில்லி;  தலைநகர் டில்லியில் முகாமிட்டுள்ள, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தர பிரதேசத்தில், பிரமாண்ட ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar