திருவண்ணாமலையில் புரட்டாசி சனி உற்ஸவம்; அதிகாலை 3:00 மணிக்கு நடை திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18செப் 2025 05:09
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி உற்ஸவத்திற்காக 20ம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு நடை திறப்புடன் துவங்குகிறது. இக்கோயிலில் புரட்டாசி சனி உற்ஸவம் செப். 20ல், செப். 27ல் , அக். 4, அக்.11, அக்18 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதனை முன்னிட்டு அன்று அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு திருமஞ்சனம், மதியம் 12:30 மணிக்கு உச்சிக்கால பூஜை, இரவு 8:00 மணிக்கு சாயரட்சை பூஜை நடக்கிறது. அக்.4 மூன்றாம் சனிக்கிழமை அன்று மட்டும் அதிகாலை 1:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. உற்சவ நாட்களில் மாலை 4:00 மணிக்கு சீனிவாச பெருமாள் கிரிவலம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரை அம்மாள் தலைமையில் கோயில் பட்டர்கள், அறநிலையத்துறையினர் செய்துள்ளனர். மாவட்டத்தின் அனைத்து நகரங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.