அன்னூர் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19செப் 2025 12:09
கோவை; அன்னூர் - தென்னம்பாளையம் ரோட்டில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் புரட்டாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை யொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அம்மனுக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் சந்தன காப்பு அலங்காரத்தில் சிறப்பு புஷ்ப அங்காரத்துடன் மூலவர் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் . இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.