ஸ்ரீவி., திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20செப் 2025 10:09
விருதுநகர்; ஸ்ரீவில்லிபுத்தூர், திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில், புரட்டாசி முதல் சனி உற்ஸவத்தை முன்னிட்டு ராஜ அலங்காரத்தில் பெருமாள் அருள் பாலித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்; திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி ஐந்து சனிக்கிழமைகளும் சீனிவாச பெருமாளை தரிசிக்க தென் மாவட்டத்தின் பல்வேறு நகரங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். இந்த ஆண்டு இன்று (செப். 20 ) முதல் சனிக்கிழமை உற்ஸவம துவங்கியது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு பெருமாளுக்கு சுப்ரபாத பூஜை மற்றும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அதனையடுத்து ராஜ் அலங்கார பெருமாளை தரிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதிகாலை 5:30 மணிக்கு கால சாந்தி பூஜை நடைபெற்றது. மதியம் 12:30 மணிக்கு உச்சிகால பூஜை, இரவு 8:00 மணிக்கு சாயரட்சை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர், கோயில் பட்டர்கள், அறநிலையத்துறையினர் செய்துள்ளனர். மாவட்டத்தின் அனைத்து நகரங்களில் இருந்தும் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.