அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனி சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20செப் 2025 10:09
கோவை; புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர்மற்றும் உற்சவருக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் சர்வ புஷ்ப அலங்காரத்தில் ஸ்ரீதேவி - பூதேவி சமேதராய் பக்தர்களுக்கு கரி வரதராஜ பெருமாள் காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள் மற்றும் தாயாரை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.