Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி தீப்பாஞ்சி அம்மன் கோவிலில் ... திருமயம் கோட்டையில் பாறை ஓவியம் கண்டுபிடிப்பு திருமயம் கோட்டையில் பாறை ஓவியம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிருங்கேரி பாரதி வித்யாஷ்ரமத்தில் ஸ்ரீசாரதா சரண் நவராத்திரி மகோத்சவம்
எழுத்தின் அளவு:
சிருங்கேரி பாரதி வித்யாஷ்ரமத்தில் ஸ்ரீசாரதா சரண் நவராத்திரி மகோத்சவம்

பதிவு செய்த நாள்

22 செப்
2025
11:09

சென்னை; சிருங்கேரி பாரதி வித்யாஷ்ரமத்தில், ஸ்ரீசாரதா சரண் நவராத்திரி மகோத்சவம் நேற்று துவங்கியது. வரும் அக்., 3ம் தேதி வரை, ஒவ்வொரு நாளும் விதவிதமான அலங்காரத்துடன் கொண்டாடப்படுகிறது.


சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் கிளையான சிருங்கேரி பாரதி வித்யாஷ்ரம், தி.நகரில் அமைந்துள்ளது. இங்கு, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடம் பாரதி தீர்த்த மகா சன்னிதானம் மற்றும் விதுசேகர பாரதி சன்னிதானத்தின் ஆசியுடன், இந்த ஆண்டு ஸ்ரீசாரதா சரண் நவராத்திரி மகோத்சவம், நேற்று முதல் வரும் அக்., 3ம் தேதி வரை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விழாவின் முதல் நாளான நேற்று காலை, சாரதாம்பாள் மகா அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து, ஜகத்குரு சந்திரசேகரேந்திர பாரதி மகாசுவாமிகள் ஆராதனை செய்யப்பட்டது. நேற்று மாலை, சுவாமிக்கு ஜகத்பிரசுதிக அலங்காரம் செய்யப்பட்டது. பின், சிறப்பு இசை நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று அதிகாலை மகாதீபாராதனை, அஷ்டாவதான சேவை நடக்கிறது. பின், கணபதி ஹோம் நடத்தப்படுகிறது. காலை 7:30 மணி முதல் சுவாசினி, கன்யா பூஜை நடக்கிறது. வரும் அக்., 1ம் தேதி சரஸ்வதி பூஜை, நவசண்டி ஹோமம், பூர்ணாஹுதி நடக்கிறது. நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் முறையே, இன்று முதல் வரும் அக்., 3ம் தேதி வரை, முதல் ஹம்ச வாகனம், விருக் ஷ வாகனம், மயூர வாகனம், கருட வாகனம், இந்திராணி, மோஹினி, காமதேனு, வீணை சாரதா, சிம்ம வாகனம், கஜலட்சுமி, ராஜராஜேஸ்வரி, ஷாகாம்பரி அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. நவராத்திரியின் போது, சப்தசதி பாராயணம், லட்சார்ச்சனை, வேதா பாராயணம், தம்பதி பூஜை நடத்தப்படுகிறது. தினசரி மாலை இசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின ... மேலும்
 
temple news
திருச்சி;  ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது  சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை மற்றும் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்துார்; பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்ததால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
அரியக்குடி; அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar