புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் நவராத்திரி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23செப் 2025 12:09
புவனகிரி; புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் நவராத்திரி உற்சவம் துவங்கியது. புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் சிறப்பு அபிேஷகம் மற்றும் நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள், ஆராதனை நிகழ்ச்சி நடந்தது. கோவில் அர்ச்சகர் ரமேஷ் ஆச்சாரியார் குழுவினர் ஆராதனை நிகழ்ச்சியை நடத்தினர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ராகவேந்திரர் புனிதத்தொண்டு அறக்கட்டளை கவுரவத் தலைவர் சுவாமிநாதன், தலைவர் ராமநாதன், செயலாளர் டாக்டர் உதயசூரியன், பொருளாளரர் கதிர்வேலு உள்ளிட்ட விழா குழுவினர் செய்தனர். வரும் 2ம் தேதி வரை சிறப்பு வழிபாடு நடக்கிறது.