சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23செப் 2025 04:09
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழா இன்று முதல் துவங்கியது.
இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 5:00 மணிக்குமேல் ஆனந்தவல்லி அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை 6:00 மணிக்குமேல் முதல் நாள் கொலுபஜனை சிறப்பு வழிபாடு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன், கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர். இதனை தொடர்ந்து தினமும் இரவு 7:00 மணிக்கு கொலு பஜனை, சிறப்பு வழிபாடு நடக்கிறது. அக். 1ல் சரஸ்வதி பூஜை, அக்.2ல் விஜயதசமியன்று ஆனந்தவல்லி அம்மன் மகிஷாசுர வர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சியும் நடக்கிறது.