Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மயில்வேல் முருகன் கோவிலில் ... திருப்பதியில் அங்குரார்ப்பணம்; இன்று பிரம்மோற்சவம் துவக்கம் திருப்பதியில் அங்குரார்ப்பணம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவொற்றியூர் தியாகராஜர் சுவாமி கோவிலில் நவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
திருவொற்றியூர் தியாகராஜர் சுவாமி கோவிலில் நவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

24 செப்
2025
10:09

சென்னை; திருவொற்றியூர் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் தியாகராஜர் சுவாமி  வடிவுடை அம்மன் கோவிலில் புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழா பக்தர்கள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது.


திருவொற்றியூர் ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி  வடிவுடையம்மன் கோவிலில் மிகவும் பழமை வாய்ந்த கோயில் இதில் பல சித்தர்கள் ஞானிகள் வந்து வழிபட்ட ஸ்தலமாகும் இதில் நின்ற கோலத்தில் இருக்கும் வடிவுடையம்மனை பல ஊர்களில் இருந்து பக்தர்கள் தரிசிக்க ஏராளமானவர்கள் வருவது வழக்கம். இந்த நிலையில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து உற்சவ சிலைக்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு தபசு அலங்காரத்தில்  பல்லக்கில் அமரவைத்து கலசம் வைத்து பரிகார பூஜைகள் யாக பூஜைகள் செய்து கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்திற்கு பால் தயிர் மஞ்சள் இளநீர் ஆகிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனைகள் செய்து பட்டாச்சாரியார்கள் முன்னிலையில் சங்கநாதம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. 


இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் ஓம் சக்தி வடிவுடைய நாயகி என கோஷமிட்டு  சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். இந்த நிகழ்வைத் தொடர்ந்து தபசு அலங்காரத்தில் வீற்றிருக்கும் அம்மனை கோயில் நான்கு மாத வீதி வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு விநாயகர் முன்செல்ல அம்மன் சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட தெய்வங்களை பல்லக்கில் தூக்கி ஊர்வலமாக மேளதாளம் முழங்க கொண்டு சென்றனர் இதனை விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் கோவில் நிர்வாகிகள் ஊழியர்கள் தரிசித்து வழிபட்டனர். தினமும்  ஒவ்வொரு நாளும் 9 நாட்கள் அம்மன் அலங்காரமாக உமா மகேஸ்வரி, மகிசாசுரமர்த்தினி, மோகினி அலங்காரம் உள்ளிட்ட 9 அலங்காரங்களில் அம்மன் கோவில் பிரகாரத்தில் சுற்றிவந்து பின்னர் நான்கு மாத வீதி வழியாக சுற்றி வந்து காட்சி தருவார் இதை ஒன்பது நாள் விரதம் இருந்து தரிசிப்பவர்களுக்கு கோடி புண்ணியம் நீண்ட ஆயுள் நோயற்ற வாழ்வு கிடைக்கும் என்று தெரிவித்தார். இன்று மிக விமர்சியாக நடைபெற்ற கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர்..

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
லக்னோ: அயோத்தி கோயிலில் தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) விழா வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் மோடி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா இனிதே நடைபெற வேண்டி, நகர காவல் ... மேலும்
 
temple news
சிவாஜிநகர்: கார்த்திகை இரண்டாவது சோமவாரத்தை முன்னிட்டு, பெங்களூரு சிவாஜிநகர் காசி விஸ்வநாதேஸ்வரர் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் ஒன்றியம் காரையூர் சிவன் கோயிலில் சாமி சிலைகளை மர்மநபர்களால் ... மேலும்
 
temple news
 ரிஷிவந்தியம்: கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 27ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar