பழநி; பழநி முருகன் கோயிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு அதிக பக்தர்களின் கூட்டம் இருந்தது.
பழநி முருகன் கோயிலுக்கு ஏராளமான வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் விடுமுறை தினத்தை முன்னிட்டு வருகை புரிந்தனர். கோயிலுக்கு செல்ல பக்தர்கள், ரோப் கார்,வின்சில் பல மணி நேரம் காத்திருந்தனர். கோயிலில் பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். குடமுழுக்கு மண்டபம் மூலம் படிப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இலவசமாக பிரசாதம், பஞ்சாமிர்தம் வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்கப்பட்டது.