புரட்டாசி சதுர்த்தி, கார்த்திகை; கோவில்களில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10அக் 2025 12:10
கோவை; புரட்டாசி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை பெரியநாயக்கன்பாளையம் -குப்பிச்சிபாளையம் ரோட்டில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவர் முருகப்பெருமானுக்கு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் சந்தன காப்பு அலங்காரத்தில் சர்வ புஷ்ப அலங்காரத்துடன் மூலவர் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
புரட்டாசி தேய்பிறை சதுர்த்தியை முன்னிட்டு கோவை ராம்நகர் பிரசன்ன மகாகணபதி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவர் விநாயக பெருமானுக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் விபூதி காப்பு அலங்காரத்துடன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பிரசன்ன விநாயகர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.