Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புத்தூர் நின்ற நாராயணப் ... திருப்பதியில் நகுல சதுர்த்தி; அக்.,25ல் பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி உலா திருப்பதியில் நகுல சதுர்த்தி; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழக பக்தர்களுக்கு புதிய வசதி: காசியில் 10 மாடி கட்டடம் தயார்!
எழுத்தின் அளவு:
தமிழக பக்தர்களுக்கு புதிய வசதி: காசியில் 10 மாடி கட்டடம் தயார்!

பதிவு செய்த நாள்

12 அக்
2025
07:10

காசி: உ லகில் உள்ள அனைத்து ஹிந்துக்களுக்கும், வாழ்க்கையில் ஒருமுறையாவது புனித இடமான காசிக்கு சென்று கங்கையில் நீராடி, காசி விஸ்வநாதரை தரிசித்துவிட்டு வர வேண்டும் என்ற ஆசை உண்டு. இங்கு, தமிழர்கள் தங்குவதற்கு பல மடங்கள் உள்ளன. தற்போது புதிய, 10 மாடி கட்டடம் ஒன்று, நாட்டுக்கோட்டை செட்டியார்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதியில், இந்த புதிய சத்திரத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். 2003லேயே இங்கு கட்டடம் கட்ட திட்டமிட்டாலும், இந்த இடம் சமாஜ்வாதி கட்சியினர் சிலரின் ஆக்கிரமிப்பில் இருந்தது. உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருடைய முயற்சியால், இந்த இடம் மீட்கப்பட்டு, 2024ல் கட்டட வேலைகள் துவங்கப்பட்டன.

காசிக்கு வரும் தமிழர்கள் மட்டுமன்றி, தென் மாநிலத்தவ்ர் அனைவரும் இங்கு தங்கலாம். ஏற்கனவே காசியில் நகரத்தாரின் சத்திரம் உள்ளது. கிட்டத்தட்ட, 50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய சத்திரத்தில் 135 அறைகள், டார்மெட்ரி, உணவு ஹால் என, பல வசதிகள் உள்ளன. இந்த இடத்தை மீட்டுக் கொடுத்து, பிரமாண்டமான கட்டடம் வர உதவிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவசியம் திறப்பு விழாவில் பங்கேற்க வேண்டும் என, நாட்டுக்கோட்டை நகர சத்திரம் மேனேஜிங் சொசைட்டி தலைவர் நாராயணன் கேட்டுக்கொண்டுள்ளார். பிரதமர் மோடியின் தொகுதியான, காசியில் நடக்கும் இந்த கட்டட திறப்பு விழாவில், பிரதமர், உ.பி., முதல்வர் யோகி மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, 2,668 அடி உயர ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழாவில் மகாதீபம் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.பழநி ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது.செஞ்சி ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே 2500 அடி உயர பிரான்மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.பாரி ஆண்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar