ஐப்பசி மாதப்பிறப்பு ; பழநி முருகன் கோயிலில் கும்ப கலசங்கள் வைத்து யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19அக் 2025 08:10
பழநி: பழநி முருகன் கோயிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இங்குள்ள ஆனந்த விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து கணபதி யாகம் நடைபெற்றது. யாகத்தில் வைக்கப்பட்ட கலசநீரில் விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு வெள்ளிக் கவச அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. இது போல் திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயில், திருஆவினன்குடி, லட்சுமி நாராயண பெருமாள், பட்டத்து விநாயகர் கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.