Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நமக்குள் இருக்கும் நரகாசுரனை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீபாவளி பண்டிகை; கோவில்களில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
 தீபாவளி பண்டிகை; கோவில்களில் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

20 அக்
2025
05:10

 தீபாவளி பண்டியை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதிகாலையில் எழுந்து நீராடி, புத்தாடைகள் அணிந்தும், பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாடினர். தீயவை நீங்கி, வாழ்வில் ஒளி பரவும் தீபாவளி திருநாளை முன்னிட்டு, உடுமலை பகுதிகளிலுள்ள கோவில்களிலும், அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடந்தன. சுவாமிக்கு, பால், தயிர், பன்னீர், பழச்சாறு, இளநீர், திருநீர், சந்தனம் என  பல்வேறு திரவியங்களில் சிறப்பு அபிேஷகம் நடந்தது. சுவாமிகளுக்கு புத்தாடைகள் அணிவித்து, சிறப்பு அலங்கார பூஜைகளும் நடந்தன.

உடுமலை திருப்பதி ஸ்ரீவேங்கடேச பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் தங்க கவச அலங்காரத்தில் எம்பெருமாள் அருள்பாலித்தார். பிரசன்ன விநாயகர் கோவிலில், சுவாமிகளுக்கு பல்வேறு திரவியங்களில் அபி ேஷகம், அலங்கார பூஜை நடந்தது, திருநீறு அலங்காரத்தில் விநாயகப்பெருமான் அருள்பாலித்தார். நவநீத கிருஷ்ண பெருமாள் கோவில், தில்லை நகர்  ரத்தின லிங்கேஸ்வரர் கோவில், ஆனந்த சாயி திருக்கோயில் என அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

திருமூர்த்திமலை திருமூர்த்தி மலையடிவாரத்தில், தோணியாற்றின் கரையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவிலில், தீபாவளி மற்றும் அமாவாசை தினம் என்பதால், மும்மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

திருமூர்த்தி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து, அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மலை மேலுள்ள பஞ்சலிங்கம் அருவிக்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்படவில்லை.

பொள்ளாச்சி தீபாவளி பண்டிகையையொட்டி, பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவில், ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள், குடும்பத்துடன் வந்து வழிபாடு செய்தனர்.

ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், தீபாவளி பண்டிகையையொட்டி குபரே சிறப்பு பூஜை நடந்தது. ஒன்பது வகை அபிேஷகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, ஒன்பது வகையான பூக்களை கொண்டு அலங்கார பூஜை நடந்தது. அதன்பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

வால்பாறை வால்பாறையில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று காலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்காலபூஜையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, முருகன் சிறப்பு அலங்காரத்தில் தேவியருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கருமலை பாலாஜிகோவில், வால்பாறை அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவில்,  வாழைத்தோட்டம்  ஐயப்பசுவாமி கோவில், எம்.ஜி.ஆர்.,நகர் மாரியம்மன் கோவில், காமாட்சிஅம்மன் கோவில், சிறுவர் பூங்கா பராசக்தியம்மன் கோவில், சிறுகுன்றா மகாளியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை(அக்.,20) மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்ககவசமும், வைரக்கிரீடமும் ... மேலும்
 
temple news
 பழநி: பழநி முருகன் கோயிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இங்குள்ள ஆனந்த ... மேலும்
 
temple news
பல்லடம்; கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர்: தீபாவளி என்னும் பெரு மகிழ்ச்சிக்குரிய நாள் ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல் சாந்தியாக, திருச்சூரை சேர்ந்த பிரசாத் தேர்வு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar