திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஐப்பசி அம்மாவாசை தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21அக் 2025 11:10
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத அம்மாவாசை தீர்த்தவாரி நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு கிராமத்தில் தேவார பாடல் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமானின் அவதாரங்களில் அகோர மூர்த்தியும், நவகிரகங்களில் ஒன்றான புதன் பகவானும் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள் பாலித்து வருகின்றனர். இக்கோவிலில் அக்னி, சூரியன், சந்திரன் என 3 தீர்த்தங்கள் உள்ளன. இங்கு ஐப்பசி மாத அம்மாவாசையை முன்னிட்டு தீர்த்தக் கரையில் எழுந்தருளிய அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து அஸ்திர தேவர் மூன்று தீர்த்த குளங்களிளும் தீர்த்தம் அளிக்கும் தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது திரளான பக்தர்கள் தீர்த்த குளங்களில் நீராடி வழிபட்டனர். பூஜைகளை ராமநாதன் குருக்கள் செய்து வைத்தார்.