மேட்டுப்பாளையம் அடுத்த ஊமப்பாளையத்தில் குண்டத்து காளியா தேவி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு அமாவாசை நாளில் சிறப்பு பூஜை நடைபெறும். ஐப்பசி மாத அமாவாசை முன்னிட்டு, இன்று காலை, 6:00 மணிக்கு கோவில் நடை திறந்து, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மதியம், 12:00 மணிக்கு பவானி ஆற்றின் கரையோரம் உள்ள ராஜகணபதி, மாதேஸ்வரன், சிவலிங்கம், கங்காதேவி, முருகன், கால பைரவர், விஷ்ணு, துர்க்கை ஆகிய சுவாமிகளுக்கு, அபிஷேகம், அலங்கார பூஜை செய்யப்பட்டது. பின்பு குண்டத்து காளியா தேவி அம்மனுக்கு, 16 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அலங்கார செய்து பூஜை செய்யப்பட்டது. கோவில் எதிரே உள்ள விநாயகர், காளிதேவி, நவகிரக சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தலைமை பூசாரி பழனிசாமி, அருள் வாக்கு பூசாரி காளியம்மாள் ஆகியோர் பூஜைகளை செய்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.