Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி முருகன் கோவிலில் சஷ்டி ... பழநி மலையில் தூவப்பட்ட விதைப்பந்துகள் துவக்கப்பட்டன பழநி மலையில் தூவப்பட்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை துவாரபாலகர் சிலையில் தங்கம் மாயம் தேவதேவசம்போர்டு துணை ஆணையர் கைது
எழுத்தின் அளவு:
சபரிமலை துவாரபாலகர் சிலையில் தங்கம் மாயம் தேவதேவசம்போர்டு துணை ஆணையர் கைது

பதிவு செய்த நாள்

24 அக்
2025
12:10

திருவனந்தபுரம்; சபரிமலையில் ஸ்ரீ கோயில் முன்புறம் உள்ள துவார பாலகர் சிலைகளில் இருந்து தங்கம் மாயமானது தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம் போர்டின் துணை ஆணையரும், முன்னாள் சபரிமலை நிர்வாக அதிகாரியுமான முராரி பாபுவை தனிப்படை போலீசார் நேற்றை கைது செய்தனர்.


சபரிமலை ஐயப்பன் ஸ்ரீ கோயில் முன்புறம் இரு பக்கங்களிலும் துவார பாலகர் சிலை உள்ளது. இது தங்கத் தகடுகளால் பாதிக்கப்பட்டிருந்தது. 2019 - ம் ஆண்டு மீண்டும் தங்க முலாம் பூசுவதற்காகவும் அதில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரி செய்வதற்காகவும் சென்னை கொண்டு செல்லப்பட்டது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் போற்றி என்பவர் இதை பொறுப்பேற்று சென்னைக்கு கொண்டு சென்றார். அப்போது சபரிமலை கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்த முராரி பாபு பதிவேடுகளில் செம்பு தகடு என்று சான்றிதழ் அளித்திருந்தார். செம்பு தகடுகளில் தங்க முலாம் பூசுவதற்காக உன்னிகிருஷ்ணனிடம் கொடுத்து விடலாம் என்றும் பரிந்துரை செய்திருந்தார். தங்கத்தகடுகளை செம்பு தகடு என்று பதிவிட்டதால் தேவசம்போர்டு துணை ஆணையர் முராரி பாபு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரை நேற்று முன்தினம் அழைத்து சென்ற தனிப்படை போலீசார் நேற்று காலை அவரை கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் அவர் பத்தனம்திட்டா மாவட்டம் ரான்னி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். முராரி பாபு 2019-ல் சபரிமலை நிர்வாக அதிகாரியாகவும், கடந்த ஆண்டு சீசனில் செயல் அலுவலராகவும் பணியாற்றினார். சில மாதங்களுக்கு முன் இவர் துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றிருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருத்தணி: முருகன் கோவிலில் நடந்து வரும் கந்தசஷ்டி விழா ஒட்டி, வரும் 26ம் தேதி வரை தினமும், இரண்டு மணி ... மேலும்
 
temple news
ஹாசன்: பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில், 14 நாட்களுக்குப் பின், நேற்று நடை அடைக்கப்பட்டது. இந்தாண்டு, 25 ... மேலும்
 
temple news
கீழக்கரை: கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சி மங்களேஸ்வரி நகரில் புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar