Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் ... கோவை சிருங்கேரி சாரதா பீடத்தில் ஆதிசங்கரர் சிலை பிரதிஷ்டை கோவை சிருங்கேரி சாரதா பீடத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் திருக்கல்யாணம் விமரிசை; கொட்டும் மழையிலும் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் கோவிலில் திருக்கல்யாணம் விமரிசை; கொட்டும் மழையிலும் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

29 அக்
2025
11:10

திருத்தணி: முருகன் கோவில்களில் நேற்று நடந்த திருக்கல்யாண விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவிலில், காலை 9:30 மணிக்கு காவடி மண்டபத்தில், உற்சவர் முருகர், வள்ளி – தெய்வானைக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில், அறக்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி மற்றும் அறங்காவலர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கொட்டும் மழையிலும் முருகன் மலைக்கோவிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால், பொது வழியில், இரண்டரை மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


ஊத்துக்கோட்டை ஊத்துக்கோட்டை ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் சூரசம்ஹாரம் நடந்தது. நேற்று காலை வள்ளி – தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


பொன்னேரி பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழா ஏழு நாட்கள் நடந்தது. கடந்த 21ல் துவங்கி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. நேற்று வள்ளி – தெய்வானை சுப்ரமணிய சுவாமிக்கு, சிறப்பு பூஜை நடந்தது. பொன்னேரி, ஆண்டார்குப்பம், பெரும்பேடு, மீஞ்சூர் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. திருவள்ளூர் திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை, வள்ளி – தெய்வானை, சுப்ரமணியர் திருக்கல்யாணம் நடந்தது. அதேபோல் பூங்காநகர், சிவ விஷ்ணு கோவில், பெரியகுப்பம் வள்ளல் விநாயகர் ஆகிய கோவில்களில், வள்ளி –தெய்வானை, சுப்ரமணியர் திருக்கல்யாணம் நடந்தது. திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதுார் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில், காலை 10:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; மண்ணிப்பள்ளம் ஆதி வைத்தியநாத கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முருகன் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் இன்று நடைபெறும் புஷ்பயாகத்திற்காக நேற்று இரவு ... மேலும்
 
temple news
ஹைதராபாத்; பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் நேற்று (அக்.29 ல்) மாலை ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அருகே, 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர்கால மூத்ததேவி கல் சிற்பம் ... மேலும்
 
temple news
அயோத்தி: உ.பி.,யில் உள்ள அயோத்தியில் பால ராமர் கோவில் கட்டுமான பணிக்கான நிதி திரட்டும் பிரசாரம் கடந்த, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar