Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோயிலில் கார்த்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நான்கு நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற சத் பூஜை நிறைவு
எழுத்தின் அளவு:
நான்கு நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற சத் பூஜை நிறைவு

பதிவு செய்த நாள்

29 அக்
2025
01:10

புதுடில்லி: நான்கு நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்ட சத் பூஜை நேற்று நிறைவடைந்தது.


பீஹார், உத்தர பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த மக்கள், ஆண்டு தோறும் தீபாவளிக்குப் பின் வரும் அமாவாசையை அடுத்து, நான்கு நாட்கள் சத் பூஜை பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடு கின்றனர். சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் சத் பூஜை நேற்று அதிகாலை நிறைவடைந்தது. இறுதி நாளான நேற்று பூர்வாஞ்சலி மக்கள் குடும்பத்துடன் நீர் நிலைகளில் பூஜைப் பொருட்களை படைத்து, பால் மற்றும் புனித நீர் ஊற்றி சூரியனை வழிபட்டனர்.


தலைநகர் டில்லியில் இந்த ஆண்டு சத் பூஜை கொண்டாட்டதுக்காக, அரசு சார்பில் யமுனை நதிக்கரையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சிறப்பு கூடாரங்கள் மற்றும் படித்துறைகள் அமைக்கப்பட்டு இருந்தன. சுத்தமான நீரில் மக்கள் சத் பூஜை வழிபாடு நடத்துவதற்காக, யமுனை நதியில் படர்ந்திருந்த நச்சு நுரை நீக்கபட்டது. நதிக்கரையில் குப்பை அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன. மின் விளக்கு, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டன. அதேபோல, டில்லி மாநகரின் பல இடங்களில் செயற்கை நீர் நிலைகள் உருவாக்கப்பட்டன.


யமுனா படித்துறையில் நேற்று காலை இறுதி நாள் வழிபாட்டில் முதல்வர் ரேகா குப்தா பங்கேற்றார். சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி வழிபாடு நடத்தினார். கலாசாரத் துறை அமைச்சர் கபில் மிஸ்ரா, சமூக நலத்துறை அமைச்சர் ரவீந்தர் இந்தரராஜ் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா ஆகியோரும் பங்கேற்றனர். அப்போது நிருபர்களிடம் பேசிய ரேகா குப்தா, “சத் பூஜை இவ்வளவு பிரமாண்டமாக கொண்டாடப்படுவதைப் பார்ப்பது திருப்தி அளிக்கிறது. கடந்த காலங்களில் யமுனை நதிக்கரையில் சத் பூஜை வழிபாடு நடத்த ஆம் ஆத்மி அரசு தடை விதித்தது . அதனால், டில்லியில் வசிக்கும் பூர்வாஞ்சலி மக்கள் செயற்கை குளங்களில் சத் பூஜை வழிபாடு நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர். ‘‘ஆனால், இந்த ஆண்டு புனித நதியான யமுனையில் நின்று, பூர்வாஞ்சலி சகோதர சகோதரிகள், சூரியனுக்கு நன்றி செலுத்தி சத் பூஜை வழிபாட்டை நிறைவு செய்து உள்ளனர்,”என்றார்.


தூய்மைப் பணி சத் பூஜை நேற்று காலை நிறைவடைந்த நிலையில், யமுனை நதிக்கரையை சுத்தம் செய்யும் பணி துவக்கப்பட்டது. வாசுதேவ் படித்துறையில் தூய்மைப் பணியை முதல்வர் ரேகா குப்தா துவக்கி வைத்தார். குடிநீர் பாட்டில்கள், பூக்கள், தேங்காய் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து அப்புறப்படுத்தினார். முதல்வருடன் அமைச்சர் கபில் மிஸ்ராவும் துாய் மைப் பணியில் பங்கேற்றா ர். அதேபோல, டில்லி மாநில பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா, மேயர் ராஜா இக்பால் சிங் ஆகியோர் யமுனை நதியின் படித்துறைகள் மற்றும் பூங்காக்களில் தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து தூய்மைப் பணி செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோஷ்டாஷ்டமி  என்பது பசுக்களைப் போற்றி வழிபடும் நாளாகும். கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமி திதியில் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத முருகன் சுவாமி சிலைகள் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில், கந்தசஷ்டி பெருவிழாவின் இறுதி ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், சோழர் காலத்தைச் சேர்ந்த 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிற்பங்கள் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவில் திருக்கல்யாண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar