ஐப்பசி சோமவார வழிபாடு; கோவில்களில் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03நவ 2025 11:11
கோவை; ஐப்பசி மாதம் மூன்றாவது சோமவார திங்கட்கிழமை மற்றும் திரயோதசி திதியை முன்னிட்டு கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1 ல் இருக்கும் கம்பீர விநாயகர் கோவிலில் உள்ள ஸ்ரீ புவனேஸ்வரருக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் சந்தன காப்பு அலங்காரத்துடன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சிவ தரிசனம் செய்தனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
ஐப்பசி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரம் மற்றும் மூன்றாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை ராம் நகர் கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த சிவபெருமான். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.