கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக முகூர்த்தக்கால் பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04நவ 2025 10:11
சேவூர்: சேவூரில், ஆயிரம் ஆண்டு பழமையான கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
கோவிலில், திருப்பணிகள் நிறைவு பெற்றுள் ளது. வரும் 30ம் தேதி காலை, 7:00 மணிக்கு மேல், 8:00 மணிக்குள் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்காக நேற்று காலை யாகசாலை அமைக்க முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திருப்பணி குழுவினர், உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். கோவிலில் கும்பாபிஷேகம் 20 ஆண்டுகளுக்கு பின் நடப்பதால் அவிநாசி மற்றும் சேவூர் வட்டார பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.