விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில், நுாற்றுகால் மண்டபத்தில் உள்ள நந்தி பகவானுக்கு நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி, மாலை 4:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 4:30 மணிக்கு நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், எலுமிச்சை, தேன் உள்ளிட்ட திரவிய பொருட்களால் அபிஷேக நடந்தது. மாலை 5:30 மணிக்கு நந்தி பகவானுக்கு அருகம்புல் மாலை சாற்றி, தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல், மங்கலம்பே ட்டை மாத்ருபுரீஸ்வரர், சின்னவடவாடி அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது.