Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நித்திய சுமங்கலி மாரியம்மன் ... சேவூர் கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவிலில் வரும் 30ல் கும்பாபிஷேகம் சேவூர் கல்யாண வெங்கட்ரமண பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தைப்பூசத்துக்கு தயாராகும் தங்கத்தேர் செஞ்சேரிமலையில் பணிகள் துரிதம்!
எழுத்தின் அளவு:
தைப்பூசத்துக்கு தயாராகும் தங்கத்தேர் செஞ்சேரிமலையில் பணிகள் துரிதம்!

பதிவு செய்த நாள்

07 நவ
2025
03:11

பல்லடம்; செஞ்சேரிமலையில், தைப்பூச விழாவில் பயன்படுத்தும் வகையில், தங்கத்தேர் தயாரிக்கும் பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது.


கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட, செஞ்சேரிமலையில், மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோவில், இப்பகுதியில் பிரசித்தி பெற்றதாக உள்ளது. ஆண்டுதோறும் நடக்கும் தைப்பூசம், பங்குனி உத்திரம், கார்த்திகை தீபம், வைகாசி விசாகம் உள்ளிட்ட பல்வேறு விழாக்களும், விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. எதிர்வரும் தைப்பூச விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்காக, தங்கத்தேர் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.


செஞ்சேரிமலை ஆதீன மடத்தின் நிர்வாகிகள் கூறுகையில், ஊர் பிரமுகர்கள், பக்தர்கள், பொதுமக்கள் பலரின் பங்களிப்புடன், தங்கத்தேர் செய்யும் பணி, கடந்த ஏப்., மாதம் துவங்கியது. அழகிய வேலைப்பாடுகளுடனும், கடவுள்கள், சித்தர்கள் மற்றும் முனிவர்களின் அழகிய உருவங்களுடனும், 12.4 அடி உயரத்தில் தங்க தேர் செய்யப்படவுள்ளது. முழுவதும் தேக்கு மரத்தாலும், அதன் வெளிப்பகுதி, செம்பு பதிக்கப்பட்டு, அதன் மேல், 1,100 பவுன் தங்கத்தால் முலாம் பூசப்பட உள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர், கீழ்ச்சீவல்பட்டியை சேர்ந்த சீனிவாசன் ஸ்தபதி மற்றும் குழுவினர், செம்பு கவசம் மற்றும் தங்க முலாம் பூசும் வேலையையும்; மாயமதம் சிற்பக் கலைக்கூடத்தைச் சேர்ந்த முருகேசன் மற்றும் குழுவினர், ரதத்தை தயாரிக்கும் மர வேலைப்பாடுகளையும் செய்து வருகின்றனர். எதிர்வரும், தைப்பூச விழாவுக்கு முன்பாக பணிகள் முடிவடைந்து, ‌ தங்கத்தேர் திருவிழாவுடன் தைப்பூச விழா விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, அதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில், ராம்லல்லாவின் தரிசனம் பெறுவதற்காகப் பெருந்திரளான ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர் திருவிழாவில், தேர்களுக்கு ... மேலும்
 
temple news
செந்துறை; செந்துறை அருகே குரும்பபட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கி ஏராளமான ... மேலும்
 
temple news
நெய்வேலி; சிவசுப்பிரமணியர் கோவில் கும்பாபிேஷகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கடலுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar