செல்லாண்டியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை; அம்மனுக்கு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08நவ 2025 11:11
கிருஷ்ணராயபுரம் மாயனுார், செல்லாண்டியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு பூஜை நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனுார் காவிரிக்கரை அருகில் மதுக்கரை செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இங்கு வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு வழிபாடு பூஜை நடப்பது வழக்கம். அதன்படி நேற்று நடந்த பூஜையில், அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. மாயனுார், கிருஷ்ணராயபுரம், கரூர் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.