Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோயில் ரோப் கார் இரண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
3,000 ஆண்டு பழமையான பாறை ஓவியம் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
3,000 ஆண்டு பழமையான பாறை ஓவியம் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

12 நவ
2025
11:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த பெரும்பாக்கம்,- செ.அகரம் கிராம வனப்பகுதியில் பறவை ஆர்வலர் சிவக்குமார் தகவலின் படி, திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த மதன்மோகன், பழனிசாமி, பாலமுருகன், ஸ்ரீதர், பாரதிராஜா ஆகியோர் கொண்ட வரலாற்று ஆய்வாளர்கள் குழு, இரு இடங்களில் பாறை ஓவியங்களை கண்டறிந்தனர்.


மனித உருவம் பாலமுருகன் கூறிய தாவது: பெரும்பாக்கம் கிராமத்தை ஒட்டிய தரைக்காடு சிறியமலை பகுதியில், கோவக்கல் என்ற பாறை முகப்பில் ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் முன்பகுதியில், மனித உருவம் சதுரங்களை கொண்டு வரையப்பட்டுள்ளது. கை மடக்கிய நிலையில், ஒரு மனிதன் காட்டப்பட்டுள்ளான். மற்றொரு ஓவியம், மனிதன், பல்லி போன்ற உருவம் வரையப்பட்டுள்ளன. மற்றொன்றில், பன்றி ஆக்ரோஷமாக சண்டைக்கு விரைவது போல உள்ளது. அதன் எதிரே மனித உருவம் உள்ளது. இவை, 2 அடி நீளம், ஒரு அடி அகலத்தில் உள்ளன. இவை, தென்னை ஓலை போன்ற பொருட்களில் அலங்கரித்த பிரபை போன்ற அல்லது பாடையின் தோற்றத்தை ஒத்துள்ளது. இரு பக்கங்களிலும், மடிந்து தொங்கும் ஓலைகள் தெளிவாக தெரிகின்றன. வெண்சாந்து நிறத்தில் உள்ள இவை, 3,000 ஆண்டு பழமையான பெருங்கற்கால பண்பாட்டின் தடயம். அக்காலத்தில், இப்பகுதியில் வாழ்ந்த தொல்குடியின் ஒரு பண்பாட்டு காட்சியாக உள்ளது. மற்றொரு இடமான பறம்பு பாறையில், செஞ்சாந்து நிற ஓவியங்கள், 5 அடி அகலம், 3 அடி உயரம் கொண்ட பெரிய விலங்கின் உருவத்தின், ஒரு சில பகுதிகள் தெளிவாகவும், மற்ற பகுதிகள் காலப்போக்கில் அழிந்த நிலையிலும் உள்ளன.


புதிய கற்காலம் இ வை பெரிய பன்றியின் உருவம் போன்று காணப்படுகிறது. வால், உடல் பகுதி தெளிவாக தெரிகின்றன. அதன் எதிரே, சித்திர வேலைப்பாடான தீ மூட்டும் ஓவியம் போன்றும், அதன் அருகில் ஒருவன் மகிழ்ச்சியை கொண்டாடும் நிலையில் இரு ப்பது போன்றும் உள்ளது. இந்த ஓவியம், 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. திருவண்ணாமலைக்கு மிக அருகில் கிடைத்த மிகவும் தொன்மையான பாறை ஓவியங்கள், திருவண்ணாமலை சுற்றுவட்டாரத்தில், புதிய கற்காலத்தில் இருந்தே மக்கள் வாழ்ந்த பகுதி என்றும், ஓவியங்கள் வேட்டை சமூகத்தின் வாழ்வி யலையும், பண் பாட்டையும் குறிக்கிறது. திருவண்ணாமலை வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற இந்த பாறை ஓவியங்களை ஆவணப்படுத்தி பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். அதே போல, விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன், நங்கியானந்தல் கிராமத்தில் கள ஆய்வு செய்ததில், கி.பி., 12ம் நுாற்றாண்டை சேர்ந்த விஷ்ணு துர்கை மற்றும் நடுகல் சிற்பம் இருந்ததை கண்டுபிடித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனின் சக்திகளில் ஒன்றான பைரவர் பிறந்த தினமே காலபைரவாஷ்டமி. இந்நாளில் அஷ்ட லட்சுமியரும் பைரவரை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலை அடிவாரத்தில் வீர விநாயகர் மற்றும் பால ... மேலும்
 
temple news
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சிவகாமிசுந்தரி அம்மன் கோவில் ஐப்பசி பூர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar