புதுச்சேரியில் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி உபன்யாசம்; நாளை துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13நவ 2025 12:11
புதுச்சேரி: புதுச்சேரியில், வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமியின் உபன்யாசம் நாளை (14ம் தேதி) முதல் மூன்று நாள் நடக்கிறது.
ராமானுஞரின் 1008ம் ஆண்டு வைபவத்தை முன்னிட்டு, கிஞ்சித்காரம் அறக்கட்டளையின் புதுச்சேரி கிளை மற்றும் லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி நிர்வாகமும் இணைந்து மூன்று நாள் சிறப்பு உபன்யாசத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. லாஸ்பேட்டை, இ.சி.ஆரில் உள்ள மேல்நிலைப் பள்ளி உள் அரங்கில் நாளை 14ம் தேதி முதல் 16ம் தேதிவரை தினசரி மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணிவரை உபன்யாசம் நடக்கிறது. அதில், நாளை 14ம் தேதி வெள்ளிக்கிழமை ‘ஹரே ராம’ என்ற தலைப்பிலும், நாளை மறுநாள் 15ம் தேதி ‘ஹரே கிருஷ்ண’ என்ற தலைப்பிலும், 16ம் தேதி மாலை ‘ஹரே ஹரே’ என்ற தலைப்பில் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி உபன்யாசம் செய்கிறார். முன்னதாக தினசரி மாலை 5:30 மணி முதல் 6:30 மணிவரை புதுச்சேரி ஜெகதீசன் குழுவினரின் நாமசங்கீர்த்தனம் நடக்கிறது.
அனுமதி இலவசம். உபன்யாசம் குறித்து தகவல் பெற விரும்புவோர் 94869 71962, 94430 85334, 88256 11581 ஆகிய மொபைல் போன் எண்களை தொடர்பு கொள்ளலாம்.