அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நாச வேலை தடுப்பு பிரிவினர் தீவிர சோதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13நவ 2025 03:11
அவிநாசி; டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நாச வேலை தடுப்பு பிரிவினர் தீவிர சோதனை செய்தனர்.
டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து நாடு முழுவதும் பல்வேறு முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு கருதி முன் எச்சரிக்கையாக தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள்,பஸ் ஸ்டாண்ட் மற்றும் மக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு சோதனை நடைபெற்று வருகிறது. இன்று அவிநாசி கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் திருப்பூர் மாவட்ட எஸ்பி அசோக் யாதவ் க்ரிஷ் உத்தரவின் பேரில்,திருப்பூர் நாசவேலை தடுப்பு பிரிவை சேர்ந்த முதல் நிலை போலீசார் கிஷோர் குமார் தலைமையில் தமிழழகன், அருண்குமார், பார்த்திபன் ஆகிய குழுவினர் கோவிலில் வாகனங்கள் நிறுத்தும் வெளி வளாகம், இரண்டாம் பிரகார பகுதிகள்,உள் பிரகாரம் என அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.