திருத்தணி: சாய்பாபா கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருத்தணி ஒன்றியம் கே.ஜி.கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல் ஆகிய இடங்களில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில்களில் இன்று மூலவருக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, மதியம் 12:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஆரத்தி நடந்தது. மாலை 6:00 மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில், கோவில் வளாகத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திருத்தணி, கே.ஜி.கண்டிகை, தலையாறிதாங்கல் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.