Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news டில்லி தமிழ்ச்சங்கத்துக்கு ... அறிவியலுடன் இணைந்த ஆன்மிகம் கண்காட்சியில் அசத்திய ஸ்ரீசாய் பள்ளி மாணவர்கள் அறிவியலுடன் இணைந்த ஆன்மிகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருவாயூர் கோவிலில் சங்கீத உற்சவம் செம்பையில் இருந்து தம்புரா புறப்பாடு
எழுத்தின் அளவு:
குருவாயூர் கோவிலில் சங்கீத உற்சவம் செம்பையில் இருந்து தம்புரா புறப்பாடு

பதிவு செய்த நாள்

16 நவ
2025
08:11

 பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் இன்று துவங்குகிறது.

கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற, குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், ஆண்டுதோறும், கார்த்திகை மாதம் ஏகாதசி உற்சவம் நடக்கிறது. நடப்பாண்டு உற்சவம், வரும் டிச. 1ம் தேதி நடக்கிறது.

இதையொட்டி, குருவாயூர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் இன்று துவங்குகிறது. கோவில் வளாகத்தில் உள்ள மேல்புத்தூர் கலையரங்கில், மாலை, 6:00 மணிக்கு நடக்கும் உற்சவத்தை, பிரபல கதகளி நடன கலைஞர் கலாமண்டலம் கோபி துவக்கி வைக்கிறார்.

நிகழ்ச்சியில், இந்த ஆண்டு செம்பை நினைவு விருது கர்நாடக இசைக் கலைஞர் பால்குளங்கரை அம்பிகாதேவிக்கு, கலாமண்டலம் கோபி வழங்குகிறார். அதன்பின், அவரது சங்கீதக் கச்சேரி அரங்கேறுகிறது.

15 நாட்கள் நடக்கும், சங்கீத உற்சவத்தில், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.

முன்னதாக, நேற்று மாலை, 6:00 மணிக்கு பாலக்காடு செம்பையில் இருந்து வைத்தியநாத பாகவதரின் தம்புரா வாகன ஊர்வலமாக குருவாயூருக்கு புறப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மண்ணூர் ராஜகுமாரனுன்னி குழுவினரின் சங்கீதக் கச்சேரி நடந்தது.

அதன்பின், செம்பை வித்யா பீடத் தலைவர் சுரேஷ், செயலாளர் முருகன் ஆகியோரிடம் இருந்து, குருவாயூர் தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் விஜயன், நிர்வாகி அருண்குமார், செம்பை சங்கீத உற்சவ கமிட்டி உறுப்பினர்கள் தம்புராவை பெற்றுக்கொண்டனர். குருவாயூர் கோவில் விழா மேடையில் இன்று மாலை தம்புரா பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
 நாகர்கோவில்: அய்யா வைகுண்டரின் 194-ம் அவதார தின விழாவையொட்டி, நேற்று, நாகர்கோவிலில் இருந்து சுவாமி ... மேலும்
 
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar