Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருவாயூர் கோவிலில் சங்கீத உற்சவம் ... மயிலாடுதுறை: திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோவில் திருத்தேரோட்டம் மயிலாடுதுறை: திருஇந்தளூர் பரிமள ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அறிவியலுடன் இணைந்த ஆன்மிகம் கண்காட்சியில் அசத்திய ஸ்ரீசாய் பள்ளி மாணவர்கள்
எழுத்தின் அளவு:
அறிவியலுடன் இணைந்த ஆன்மிகம் கண்காட்சியில் அசத்திய ஸ்ரீசாய் பள்ளி மாணவர்கள்

பதிவு செய்த நாள்

16 நவ
2025
12:11

ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு விழா தற்போது அனைத்து பகுதி யிலும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.


அவ்வகையில் திருப்பூர் மாவட்ட ஸ்ரீசத்ய சாய் சேவா மையம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து இந்தாண்டு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டு வருகிறது.அதன் ஒரு கட்டமாக, திருப்பூர், பி.என். ரோட்டில் செயல்படும் ஸ்ரீசாய் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், கல்வி மற்றும் ஆன்மிக கண்காட்சி மாணவர்களின் படைப்புகளை காட்சிப் படுத்தும் வகையில் மூன்று நாட்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


மாணவர்கள் 800 பேரும் 50 ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் கீழ் கண்காட்சியை ஏற்பாடு செய்து அரங்குகளை அமைத்திருந்தனர்.


பொதுவாக அறிவியல், கல்வி கண்காட்சி என்பது மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையிலான படைப்புகளை காட்சிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும்.


இக்கண்காட்சி கல்வி மட்டுமின்றி ஆன்மிகத்தையும் உணர்ந்து கொள்ளும் வகையில் மாணவர்களின் படைப்புகளை உள்ளடக்கியதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


இக்கண்காட்சியின் நோக்கமானது, நற்பண்புகள், நல்ல பழக்க வழக்கங்கள், ஒழுக்கம், நேர்மை, அன்பு, பரிவு, இரக்கம், பிறருக்கு உதவி செய்தல் மற்றும் இயற்கை பாதுகாப்பு ஆகியன குறித்த தகவல்களை மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இச் சமூகத்துக்கும் உணர்த்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டதாக இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


பாடவாரியாகவும், அணி வாரியாகவும் கண்காட்சியில் படைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தன.


கண்காட்சியின் அனைவரையும் கவரும் வகையில், ‘சர்வதர்ம ஸ்துாபம் சுவாமி ஸ்ரீசத்யசாய் பாபாவின் வாழ்க்கை வரலாறு’ குறித்த படைப்பு அமைந்திருந்தது. சாய்பாபாவின் கோட்பாடுகள் அவரின் உன்னதமான சேவைகளை எடுத்துரைக்கும் வண்ணம் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.


சுற்றுச்சூழல் கழகம் சார்பாக பல பயனுள்ள தகவல்களை, சுற்றுச் சூழல் பாதிக்கும் நிலை, அதை பாதுகாக்கும் நடைமுறைகளும் அதன் அவசியம் குறித்தும் மாணவர்கள் விளக்கினர்.


ரத்த தானம் செய்வதன் முக்கியத்துவம், சாய்பாபாவின் வாழ்க்கை வரலாறு, ‘தெய்வீக தியான அறை’, மூவேந்தர்களின் செயல் பாடுகள், தானியங்கி முறையில் நுண்ணறிவு செயல் விளக்கம், ஸ்ரீரங்கம், அயோத்தி ராமர் கோவில் போன்ற சிறப்புமிக்க கோவிலின் மாதிரிகளை அமைத்து, கட்டட கலைகள் மற்றும் வரலாற்று சிறப்புகள் குறித்து மாணவர்கள் விளக்கினர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில், இன்று பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. திருமலையில், பார்வேட்டு மண்டபத்தில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar