Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  தினமலர் செய்தி எதிரொலி; ... காவிரி துலா கட்டத்தில் முடவன் முழுக்கு; சுவாமிக்கு தீர்த்தவாரி.. பக்தர்கள் புனித நீராடி தரிசனம் காவிரி துலா கட்டத்தில் முடவன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுவாமியே சரணம் ஐயப்பா; கார்த்திகை பிறந்தது.. மாலை அணிந்து விரதம் துவங்கிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
சுவாமியே சரணம் ஐயப்பா; கார்த்திகை பிறந்தது.. மாலை அணிந்து விரதம் துவங்கிய பக்தர்கள்

பதிவு செய்த நாள்

17 நவ
2025
10:11

கோவை ; கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டனர். இதனால் கோயில்களில் ஐய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல கால பூஜை கார்த்திகை மாதம் முதல் தேதி துவங்குவது வழக்கம். இந்த நாளில் ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து விரதம் துவங்குவர். 


கார்த்திகை மாதம் என்றாலே சபரிமலை ஐயப்பனின் சுவாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷம் எட்டுத்திக்கும் ஒலிக்கும். 2025-ம் ஆண்டு தமிழ் கார்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு கோவை சித்தாபுதூர் ஐயப்ப சுவாமி கோவில்,ராம் நகர் ஐயப்பன் பூஜா சங்கம்,மேட்டுப்பாளையம் ரோடு ஐயப்பன் கோவில், சுந்தராபுரம் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 2 ஆகிய கோவில்களில் சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. இதில் கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் இன்று முதல் சுவாமி ஐயப்பனுக்கு விரதம் இருக்கும் பக்தர்கள் துளசிமணி மாலை அணிந்து சுவாமி ஐயப்பனை வழிபட்டனர். அதேபோன்று ராம் நகர் ஐயப்பன் பூஜை சங்கத்தின் 75-ம் ஆண்டு விழாவையொட்டி கார்த்திகை மாத பிறப்பு சிறப்பு பூஜைகள்  இன்று முதல் ஆரம்பமாகின்றன. இதையொட்டி பூஜா சங்கத்தின் நுழைவாயிலில் உள்ள சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பக்தி பாடல்கள் மற்றும் பஜனை பாடல்கள் பாடப்பட்டது. சுவாமி ஐயப்பனின் திருவுருவ சிலைக்கு பால், தேன் . பன்னீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி ஐயப்பனின் அருளை பெற்றனர். கோவை மேட்டுப்பாளையம் ரோடு ஐயப்ப சுவாமி கோவிலில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு இருமுடி கட்டும் நிகழ்ச்சியும், மாலை அணிவித்தலும் நடைபெற்றது. தொடர்ந்து இந்த ஆலயத்தில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்களின் நடை திறக்கப்பட்டதை அடுத்து, ... மேலும்
 
temple news
சென்னை : தமிழகத்தில் வரும், 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. நாளை மாலை, 6:00 மணியுடன் பிரசாரம் ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சி கிழக்கு தொகுதியில், நேற்று ரோடு ஷோ நடத்தி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட, த.வெ.க., தலைவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar