Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கார்த்திகை முதல் சோமவாரம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயப்ப, முருக பக்தர்களுக்காக பிள்ளையார்பட்டியில் இன்று முதல் கூடுதல் நேரம் நடை திறப்பு
எழுத்தின் அளவு:
ஐயப்ப, முருக பக்தர்களுக்காக பிள்ளையார்பட்டியில் இன்று முதல் கூடுதல் நேரம் நடை திறப்பு

பதிவு செய்த நாள்

17 நவ
2025
03:11

திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் முருகன் மற்றும் ஐயப்ப பக்தர்களின் சுவாமி தரிசனத்திற்காக கார்த்திகை மாதம் முதல் கூடுதல் நடை திறக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


நகரத்தார் கோயிலான இங்கு குடவரையில் மூலவர் விநாயகர் தியானநிலையில் எழுந்தருளுகிறார். கார்த்திகை துவங்கியவுடன் பழநி, சபரிமலை செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்குவர். தொடர்ந்து கோயில்களுக்கு சென்று சாமி தரிசனத்தை துவங்குகின்றனர். இதனால் பிள்ளையார்பட்டிக்கு பல மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வருகை அதிகரிக்கும். பக்தர்களின் வசதிக்காக கார்த்திகை, மார்கழி மாதங்களில் சுவாமி தரிசனம் செய்ய கூடுதல் நேரம் நடை திறக்கப்படுகிறது. இது குறித்து நடப்பு காரியக்காரர்கள் காரைக்குடி சித.பழனியப்பச் செட்டியார், நச்சாந்துபட்டி மு.குமரப்பச் செட்டியார் கூறியதாவது, வழக்கமாக கோயில் நடை மதியம் 12:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை சாத்தப்பட்டு இருக்கும். மாலை 4:00 மணி முதல் இரவு 8:45 மணி வரை நடை திறந்திருக்கும். தற்போது காலை 6:00 மணிக்கு துவங்கி இரவு 8:45 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக நடை திறந்திருக்கும் என்றனர். கூடுதல் நேரம் நடை திறந்திருந்தாலும் வழக்கம் போல் நித்ய பூஜைகள் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ; கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; காவிரி துலா கட்டத்தில் முடவன் முழுக்கு, மனோன்மணி சமேத சந்திரசேகர சுவாமி எழுந்தருளி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 15 நாட்களுக்கு நடக்கும், செம்பை சங்கீத உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
மதுரை;  கார்த்திகை முதல் தேதியை முன்னிட்டு சபரிமலைக்கு செல்லும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மதுரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar