Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாச்சலேஸ்வரர் கோவில் ...  ஆன்மிக சக்தியும், செல்வமும் சுரக்கும் பாரத பூமி சிருங்கேரி ஜகத்குரு அருளுரை ஆன்மிக சக்தியும், செல்வமும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொத்தப்பி சோழர் கல்வெட்டு கடப்பா நாத நாகேஸ்வரர் கோவிலில் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
பொத்தப்பி சோழர் கல்வெட்டு கடப்பா நாத நாகேஸ்வரர் கோவிலில் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

18 நவ
2025
10:11

சென்னை: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள நாத நாகேஸ்வரர் கோவிலில், பொத்தப்பி சோழர்களின் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள பொத்தப்பி என்ற ஊரை தலைநகராகக் கொண்டு, 6 – 7ம் நுாற்றாண்டில் ஆட்சி செய்தவர்கள், ரே நாட்டு சோழர்கள் எனும் பொத்தப்பி சோழர்கள். இவர்கள் பெல்லாரி, கோனிடேனா, நன்னுாரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆட்சி செய்துள்ளனர்; தெலுங்கு சோழர்கள் எனவும் அழைக்கப்பட்டனர். அவர்கள், தங்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பல்வேறு கோவில்களை கட்டியும், பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கோவில்களை சீரமைத்தும், அவற்றை பராமரிக்க நில தானங்களை வழங்கியும் உள்ளனர். அதற்கு ஆதாரமாக, தற்போது புஷ்பகிரி நாத நாகேஸ்வரர் கோவிலில், பொத்தப்பி சோழர்களின் கல்வெட்டுகளை, மத்திய தொல்லியல் துறையினர் கண்டறிந்துள்ளனர். ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், பென்னா நதிக்கரையில் உள்ள பழமையான கோவில்களில், மிகவும் புகழ்பெற்றது நாத நாகேஸ்வரர் கோவில். இந்த கோவிலில், தற்போது மத்திய தொல்லியல் துறையின் தென்மண்டல கல்வெட்டு பிரிவு இயக்குநர் முனிரத்தினம் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது, அந்த கோவிலில், 16 தமிழ் கல்வெட்டுகள் இருந்ததை கண்டறிந்தனர். இதுகுறித்து, முனிரத்தினம் கூறியதாவது: தற்போது நாங்கள் கல்வெட்டுகளை படியெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அவை, 12 – 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, பொத்தப்பி சோழர்களின் கல்வெட்டு என்பதை அறிந்துள்ளோம். மற்ற தகவல்கள், அனைத்து கல்வெட்டுகளையும் படியெடுத்து படித்த பின்தான் அறிய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாதந்தோறும் வரும் சதுர்த்தசி தினத்தை சிவராத்திரியாக வழிபடுகிறோம். இன்று செவ்வாய் கிழமை ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த முடியனுர் கிராமத்தில் பாழடைந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் ... மேலும்
 
temple news
‘‘பாரத பூமி ஒரு கர்ம பூமி; அளவற்ற ஆன்மிக சக்தியும், செல்வமும் சுரக்கும் தேசம். பொருளாதார ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி மற்றும் சேவூரில் உள்ள ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு விரதம் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் கார்த்திகை முதல் சோமவார உற்சவத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar