பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் கார்த்திகை முதல் சோமவார உற்சவத்தில் வீரட்டானேஸ்வரர், அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாதம் முதல் சோமவாரம் உற்சவம் நேற்று நடந்தது. காலை 11:00 மணிக்கு அம்பாள் பெரியநாயகி, வீரட்டானேஸ்வரர் சுவாமிக்கு ஆகம விதிப்படி சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர் சுவாமிக்கு நாகாபரணத்துடன் கூடிய புஷ்ப அலங்காரத்திலும், அம்பாள் பெரியநாயகி வெள்ளி அங்கியுடன் புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தனர். இரவு 8:00 மணிக்கு உற்சவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு தீபாராதனை, உற்சவர் சுவாமி உள்புறப்பாடு நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.