Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தனலட்சுமி அலங்காரத்தில் ... தொடர் மழை; குறுக்குத்துறை முருகன் கோவிலுக்குள் வெள்ள நீர் புகுந்தது தொடர் மழை; குறுக்குத்துறை முருகன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் மலைமேல் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ஆய்வு
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் மலைமேல் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ஆய்வு

பதிவு செய்த நாள்

20 நவ
2025
10:11

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபம் அருகிலுள்ள மண்டபம், நெல்லித்தோப்பு ஆகிய பகுதிகளை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் நேற்று ஆய்வு செய்தார். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவின் உச்சநிகழ்ச்சியாக கோயில் சார்பில் மலை மேல் உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தின் அருகில் உள்ள மண்டபத்தின் மேல் தீப கொப்பரை வைத்து கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக ஹிந்து அமைப்பினர் கோரிக்கையை வைத்தும், ஆர்ப்பாட்டம் நடத்தியும் வருகின்றனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டுமென வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரணையில் உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை 5:30 மணிக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் பழைய படிக்கட்டுகள் வழியாக மலைமேல் சென்றார். கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபம் அருகிலுள்ள மண்டபம், நெல்லி தோப்பு, மலை உச்சியில் உள்ள தீபத்தூண் ஆகியவற்றை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மலை உச்சியிலுள்ள தீபத்தூணுக்கு அவர் சென்ற பொழுது இருட்டாகி விட்டதால் டார்ச் வெளிச்சத்தில் தீபத்தூணை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பார்வையிட்டார். பின்பு அவர் புதிய படிக்கட்டுகள் வழியாக இரவு 7:15 மணிக்கு கீழே இறங்கி வந்து புறப்பட்டார். நீதிபதியுடன் சுப்பிரமணிய சுவாமி கோயில் துணை கமிஷனர் யக்ஞ நாராயணன், போலீஸ் துணை கமிஷனர் இனிகோ திவ்யன், உதவி கமிஷனர் சசிப்பிரியா, இன்ஸ்பெக்டர்கள், மதுரை வீரன் ராஜதுரை உடன் சென்றனர்.


போலீஸ் ஜீப்பில் வந்த நீதிபதி:; நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலையில் ஆய்வு செய்ய போலீஸ் ஜீப்பில் வந்தார். ஆய்வு முடித்து அவரது காரில் புறப்பட்டார். மலையில் இருந்து இறங்கிய நீதிபதி, உடன் வந்த போலீசாருக்கு தனது காரில் இருந்த தண்ணீர் பாட்டில் கொடுத்து தாகம் தணித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழையினால் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; கொள்ளிடம் அருகே மேலவல்லம் கிராமத்தில் பிரத்யங்கிரா தேவி கோயில் உள்ளது. இக்கோயிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar