பதிவு செய்த நாள்
23
நவ
2025
04:11
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத கடை ஞாயிறு விழா இன்று துவங்கியது.
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாத ஞாயிற்று கிழமைகளில், வாரந்தோறும் பக்தர்கள் மாவிளக்கு பரிகாரம் செய்யும், கடை ஞாயிறு விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கார்த்திகை மாத முதல் ஞாயிற்று கிழமையான இன்று முதல் வார கார்த்திகை, கடை ஞாயிறு விழா துவங்கியது. இதில், சிறுவர்கள், பெரியவர்கள் என, திரளான பக்தர்கள் மண்சட்டியில், பச்சரிசி மாவு, வெல்லம் சேர்த்து, அதில் அகல் விளக்கில் நெய்தீபம் ஏற்றி, தலையில் மாவிளக்கு சுமந்தபடி கோவிலில் வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்பாட்டை கோவில் செயல் அலுவலர் திவ்யா, கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.