கார்த்திகை சோமவாரம்; ஆதிபுரீஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24நவ 2025 03:11
பள்ளிக்கரணை; பள்ளிக்கரணை சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு, 1,008 சங்காபிஷேகம் நடந்தது.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில், சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமைகளில், சிவன் கோவில்களில் சங்காபிஷேகம் நடப்பது உண்டு. இந்த மாதத்தில் ஐந்து திங்கட்கிழமைகள் வருகின்றன. முதல் திங்கட்கிழமை பிரதோஷ நாளானது, சங்குகளில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். அந்த வகையில் இரண்டாவது திங்களான இன்று 1,008 சங்குகளால் அபிஷேகம் நடந்தது. முன்னதாக நேற்று மாலை 4:00 மணி அளவில், 1,008 சங்குகள் ஸ்தாபனம் செய்யப்பட்டு, ஹோமம் நடந்தது. இன்று காலை 9:00 மணி அளவில் ஹோமங்கள் துவங்கி பூர்ணாஹுதியும், பின் 1008 சங்காபிஷேகமும் நடந்தது. சங்காபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.