நாயன்மார்கள் 63 வரில் விபூதியையும், சிவனடியாரையுமே சிவனாக கண்டு போற்றியவர் திருநீற்று செல்வர் என்று போற்றப்பட்டு, திருக்கோவிலூரை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்தவர் மெய்ப்பொருள் நாயனார். இவருக்கு கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் சித்தி வளாகம் அமைந்துள்ளது. திருக்கோவிலூர் மெய்ப்பொருள் நாயனார் சித்தி வளாக வழிபாட்டு மன்றத்தின் சார்பில், 22 ம் ஆண்டு குருபூஜை விழா இன்று நடந்தது. செத்தவரை தர்ம பரிபாலன டிரஸ்ட் சுவாமிகள் சிவஜோதி மோன சித்தர் இடப்பக் கொடியை ஏற்றி விழாவை துவக்கி வைத்தார். திருவண்ணாமலை, மாயம் துறவிய சங்க தலைவர் ஜீவா அம்மாள், எலந்தம்பட்டு அருணாச்சலம் ஐயா, விருத்தாசலம் 63 திருப்பணி மன்ற நிர்வாகி சங்கர், விழுப்புரம் சங்கர்ஜி முன்னிலை வகித்தனர். இட்டலிங்க ஆத்ம லிங்க மூர்த்தி களுக்கு, சிவனடியார்கள் அபிஷேக ஆராதனை, மலர் வழிபாடு, ஒலி வழிபாடுகளை செய்கின்றனர். தொடர்ந்து மெய்ப்பொருள் நாயனர் மூலமூர்த்திக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 3:00 மணிக்கு வி.புத்தூர் பால கோபால பெருமாள் குழுவினரின் பஜனை, மணலூர்பேட்டை ராதா அம்மாள் குழுவினரின் திருவாசகர் முற்றோதலும், 6:00 மணிக்கு மெய்ப்பொருள் நாயனார் குறித்த சொற்பொழிவு, ஜீவசீனிவாசனின் இசை சொற்பொழிவும் நடக்கிறது. இதில் ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.